Ad Widget

முள்ளிவாய்க்கால் காணி சுவீகரிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முள்ளிவாய்க்காய் பகுதியில் கோட்டாபய கடற்படைத்தளம் அமைந்துள்ள காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கூட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவனேசன், வடமாகாண பிரதி அவைத் தவிசாளர் அன்ரனி ஜெகநாதன், கோட்டாபய கடற்படைத்தள கடற்படை அதிகாரிகள், பொலிஸார், காணி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

இக்கூட்டத்தில் காணி சுவீகரிப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிடுவது எனவும் இம்மாதம் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இறுதித் தீர்வு எட்டப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Related Posts