இலங்கையில் அதிகரிக்கும் வாய்ப் புற்று நோய்

இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆண்டு தோறும் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இந் நோயாளர்களில் 78 சத வீதமானோர் ஆண்கள்...

சீ.எஸ்.என்னின் 157.5 மில்லியன், பஷிலின் நிலங்கள் அரசாங்கத்தின் வசம்

சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள...
Ad Widget

அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? டக்ளஸ் கேள்வி!

அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினர். அதே போன்று, வன்னி சிற்றரசின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கெதிராகப் போரடினர்....

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிப்பு

கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை...

முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த தமிழ் - சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இந்நிலையில், ஜூலை...

முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை: புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வௌியிட்டுள்ளார். அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள்...

தபால் ரயில் மீது கல்வீச்சு!! 3 பெட்டிகள் சேதம், பலர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...

வலி வடக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்சேசன்துறை பகுதியில் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன்...

50 ரூபாய்க்கு முடிவெட்டும் இராணுவத்தினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார...

‘மகனை திருத்திதாருங்கள்’: தந்தை பொலிஸாரிடம் மன்றாட்டம்

சுழிபுரத்திலுள்ள தனது கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்ட குழுவில் தனது மகனும் இடம்பெற்றிருந்தை அறிந்த தந்தை ஒருவர், தனது மகனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து, அவனைத் திருத்தி தருமாறும் பொலிஸாரைக் கேட்டுக்கொண்ட சம்பவமொன்று, பொன்னாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, சிறுவனான மகனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த திருட்டுக்...

தென்னையையும் வீட்டையும் காப்பாற்றிய ஆசிரியர்

கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில்...

எனது அரசியல் வாழ்வை விக்னேஸ்வரன் அழிக்கிறார்-சீ.வீ.கே.சிவஞானம்

வடக்கு மாகாண முதலமைச்சர், எனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உறுப்பினர் பரஞ்சோதியின் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் உடனடியாகவே மறுத்திருந்தார். வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து...

இரணைமடுவில் அத்துமீறிய புத்தவிகாரை அமைப்பதற்கெதிரான மக்கள் போராட்டம் குறித்த கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டுவருகின்றது. மேற்படி கட்டுமான வேலைகளில் பெருமளவு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவசர அவசரமாக மதில் கட்டி எழுப்பும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவ மற்றும் அரச...

யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ். பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட விஞ்ஞானப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும்...

பொரு­ளா­தார மத்­திய நிலை­யம்: இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­லேயே அமைக்­க­வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி இன்று முதல் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் (வயது 73) என்­பவர் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளார். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்டபாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் இந்த தக­வலை பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நிதி முகா­மைத்­துவம் (பொறுப்பு திருத்தச்) சட்­ட­மு­லத்தின் இராண்டாம் மதிப்­பீடு தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில்...

முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டுமாறு மாகாணசபை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் கோரிக்கை!

முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீரென மரணமடையும் சம்பவங்கள் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தகவல்களை சேகரிக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபையின் 58ஆம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம், முன்னாள் போராளிகள் சிலர், தங்கள்...

மகளை எனக்கு காட்டாதவர்களா நீதியை வழங்கப் போகிறார்கள்? ஒரு தாயின் ஆதங்கம்

இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே அவர் இவ்வாறு...

வடக்கு மாகாணசபையில் ஜிஞ்சர் குறூப்!-பொ.ஐங்கரநேசன்

என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கு, மாகாண சபை ஆளுங்கட்சியில் உள்ள ஜிஞ்சர் குறூப்பை சேர்ந்தவர்களே முயற்சிப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கான குழு ஒன்றை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளமை தொடர்பாகவும் அந்தக் குழுவின் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாகாண சபைக்கு...

போர்க்குற்றங்களை மறைக்கும் ஐ.நா ஆவணம்! முதலமைச்சர் சந்தேகம்

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 'ஐக்கிய நாடுகள் சபையின்...

தொடரும் முன்னாள் போராளிகள் மரணம்! மற்றொரு போராளியும் சாவு!!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...
Loading posts...

All posts loaded

No more posts