- Wednesday
- March 11th, 2026
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு...
கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே...
யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று (10) மாற்றுவலுவுள்ள பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் – மேலும் அவர்...
தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில்...
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான எனது அனுபவம், ஆற்றல் காரணமாகவே, நான் ஈ.பி.டி.பி கட்சியைச் சார்ந்தவராக இருந்தும், முதலமைச்சர் தன் சார்பாக அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி கோரியிருந்தார் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா கூறியுள்ளார். அவ்வாறான அவரினது கோரிக்கைகளிற்கு நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேனேயன்றி, அவர் சார்பாக கழியாட்ட...
காணாமற்போனோர் அலுவலக அமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் உடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதனை நிறைவேற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.இதனால் பாராளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாற்பண்ணையாளர்களுக்கான வயல் விழா யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று வியாழக்கிழமை (11.08.2016) நடைபெற்றது. பண்டத்தரிப்பில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கிவருகிறது. குறிப்பாக, பசுக்களில் பால் சுரப்பைப் போசாக்கான உணவின்மூலம் அதிகரிக்கும்...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும்,...
யாழ் போதனா வைத்தியசாலையில் ஜுலை மாதம் 8 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான தடையுத்தரவு தொடர்பான வழக்கு முடிவடையும் வரையில் அந்தத் தடையுத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீடித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பூரணமான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்படும் என...
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வயோதிபர் ஒருவர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. வவுனியா தெற்கு பிரதேச சபையின் ஓமந்தை உப அலுவலகத்திற்கு முன்னால் தா.மகேஸ்வரன் என்ற 73 வயதான வயோதிபர் இவ் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம்...
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...
வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய் கூறியுள்ளார். சைக்கிளொன்றில்...
வட மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வட மாகாண சபையுடனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் இது தொடர்பான விவரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) தெரிவித்துள்ளார். வடக்கில் மக்களைக் மீள்குடியேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வட மாகாண...
திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே...
வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஷ்பிரயோக கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. ஆறு மாதங்களாக இந்த சந்தேக நபர் எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி விளக்கமறியலில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்து அவரைப் பிணையில்...
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கிணங்க யாழ் மாவட்டத்தில் கலாச்சார மண்டபத்தினை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் ரூபா. 1.7 பில்லியன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு ஏற்ப யாழ் மாவட்டத்தின் கலாச்சார நிலையம் யாழ் பொது நூலகம் மற்றும், புல்லுக்குளம் நீர்நிலையை அண்மித்ததாக இது நிறுவப்படவிருக்கின்றது. இந் நிலையம் வெளி மேடைகளின் மூலம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக்...
மாற்றுத் திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத் திறனாளி சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, இவர்கள் நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து நேற்று...
ஈராக் தலைநகரான பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவால் இங்குள்ள வளர்ச்சியடையாத சிசுக்களை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று...
Loading posts...
All posts loaded
No more posts
