போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை பயண்படுத்தும் யாழ் இளைஞர்கள்!!

வலியைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக யாழ்ப்பாண இளைஞர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக பெருமளவிலான போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்படுவதும் அவைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால் அதிகளவிலான இளைஞர்கள் வைத்திய சாலைகளில் வலியின் அதிகத்தால்...

யாழ். வருகின்றார் எஸ்.பி பாலசுப்பிரமணியம்

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வரவிருகின்றார்.
Ad Widget

நான்காம் மாடியில் ‘ஸ்பிரே’ அடித்து சித்திரவதை செய்தனர்! முன்னாள் போராளி தெரிவிப்பு

"பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்." இவ்வாறு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:- "நாம் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்துச்...

நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார்....

தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு அவசியம்

நோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார். மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற...

கொழும்பு நிதி நகர ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டது

கொழும்பு சர்வதேச நிதி நகரத்திற்கான (துறைமுக நகரம்) முத்தரப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. நேற்று (12) கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மூன்று தரப்பினர் இதில் ஒப்பமிட்டுள்ளதுடன், தற்போதைய அரசினால் இது நிதி நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மா நகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை...

பன்னாட்டு மாணவர்கள் யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரநடுகை

பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும்...

கிளிநொச்சியிலும் லைக்காவின் நிதிப் பங்களிப்புடன் மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

சிறுபான்மை மக்களின் வாக்குகளே யுத்ததிற்கு காரணம் ; விஜயகலா மகேஸ்வரன்

ஸ்ரீலங்காவில் 2005 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்காமையினால் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோரை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமையே இறுதிக்கட்ட யுத்த்தின்...

பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று சமர்பிப்பு

யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த காணாமல் போனோர் ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதியன்று நிறைவுக்கு...

ஐஎஸ் சந்தேகத்தால் விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுனாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவூச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு...

8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலில் பாதுகாக்கப்பட்ட மீன்கள்!!

மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச்...

போர்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா உறுதி

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்குற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு...

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் கைதி யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்கிடமாக ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த அரசியல் கைதியை உடனடியாக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் கோரியதையடுத்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....

விசாரணைக்காக சுமந்திரன் முன் முன்னிலையாகப்போகும் மகிந்தராஜபக்ஷ!

அரச கணக்குகளிலிருந்து மறைத்து வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் 3பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின்முன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு முன்னிலையாகவேண்டுமென சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு...

நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு எடுத்த முதல் நகர்வுக்கு சுமந்திரன் பாராட்டு!

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியென்றும் அவர் பாராட்டினார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்...

போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை!! சிவமோகன்

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம் எனவும் குதர்கமாகப் பேசியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் குழுநிலைக் கூட்டம் கடந்த 9ஆம் திகதி...

யாழ் முஸ்லிம்களுக்கான நடமாடும் சேவை ஒஸ்மானியா கல்லூரியில்

யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான விசேட நடமாடும் சேவை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ் விசேட நடமாடும் சேவை இடம்பெறும் என யாழ் மாவட்ட...

நல்லூரில் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகள்!!

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டமை...

தொடர்கின்றது ரயில் மீது கல்வீச்சு: ஒருவர் காயம்

ரயில் மீது மேற்கொள்ளப்பட கல்வீச்சு தாக்குதலில் பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் ரயில், திருகோணமலை மற்றும் சீனக்குடா ஆகிய பிரதேசத்துக்கிடையில் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சிலேயே பயணியொருவர் காயமடைந்துள்ளார். இதற்கு முன்னரும் கிளிநோச்சி பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்...
Loading posts...

All posts loaded

No more posts