Ad Widget

குடாநாட்டில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் இன்று தொலைத்தொடர்பு பரிவர்த்தனை சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன.

இணைய வலையமைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே குறித்த சேவை தடைப்படதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts