- Wednesday
- May 6th, 2026
வடக்கு மாகாண கால்நடை அமைச்சின் முதலாவது நடமாடும் மருத்துவசேவை நேற்று முன்தினம் (20.08.2016) மன்னாரில் நடைபெற்றுள்ளது. நானாட்டான் மோட்டைக்கடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற இந்நடமாடும் மருத்துவ சேவையை வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 34...
கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...
முன்னாள் போராளிகள் மனம் தளராது மன தைரியத்துடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்....
விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடாத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சியிலும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இங்கே விடுதலைப்புலிகள் பொங்குதமிழ் நிகழ்வுகளை நடாத்தியதாகத்...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடாத்தப்பட்டால் அது முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்...
யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களால், அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் அவர்களால் அப் பகுதி மக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியுள்ள மணியந் தோட்டம், உதயபுரம், பூம்புகார்,...
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின்...
யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே...
இந்நியாவிலிருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவினை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களை பருத்தித்துறை மணல்காடு பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும்...
எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற குடிநீர் போத்தல்களை பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச் செல்லுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜுன் மாதம் 11 ஆம் திகதி வெளியயிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர்...
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக்...
முச்சக்கர வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களின் மூலம் தமிழ் மொழி வாழ்கின்ற அதேவேளையில் பஸ் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ் மொழி வீழ்கின்றது என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் இன்று கலந்து கொண்டு...
இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் காணிகளற்றவர்களாக 936பேர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 971 வீடுகளைக் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 104 வீடுகள் பலாலி...
சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் பிணையில் சென்றிருந்த எதிரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்க்கண்டு...
சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளனர் எனக் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் ஒரு தகவல் கூறப்பட்டது....
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் விஸ்தீரணமாக காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள காணி மாவட்ட செயலாளர் ஊடாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இக்காணி விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட்டதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டமுள்ள ஒரு நாட்டில் எவருக்கும் உரிமையற்ற சொத்துக்கள் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். உரிமை கோராமல் இந்தப் பணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...
சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
ஆசிய வலய நாடுகளில் கல்வியில் இலங்கை முதலிடம் வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பெக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசியரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவும் கல்வியமைச்சு பல வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான பயணம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயிலுள்ள தெற்காசியாவிற்கான ஆசிரிய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்காசியாவிலுள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
