- Wednesday
- May 6th, 2026
வட மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்....
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான பெண் நேற்றய...
முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும்...
மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து...
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் ஐ.நா விசாரணை நடத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முன்வர வேண்டுமெனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ...
பங்கு கொள்வனவு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாமல் அவர்களை இன்று கொழும்பு நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய இருவருக்கும் ரூபாய் 100 லட்சம் பெறுமதியான 4 சரீர பிணைகள் மற்றும்...
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த...
சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரியுடன் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வந்தார். இரவுப் பொழுதை திருப்பதியில் கழித்த அவர்கள் நேற்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு...
அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க விமானப் படை மருத்துவக் குழுவின் மருத்துவ முகாமில் 2500 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இறுதிநாள் மருத்துவ முகாமில் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர். இந்த மருத்துவ முகாம் அச்சுவேலி...
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய...
முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார். சிறீலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஆலோசனைக்கமையவே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அண்மைக்காலமாக, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிஜாப்...
புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்....
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....
நடந்து முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான இரண்டாம் பகுதி வினாத்தாளில், அரசியல் புகுந்து விளையாடிவிட்டதாக அப்பாடத்துக்கான பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் விசனம் தெரிவித்தனர். இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 7 மற்றும் 8ஆம் வினாக்கள் இரண்டும், தற்போதைய அரசாங்கத்தை இலக்குவைத்தே கேட்கப்பட்டிருந்ததாக அம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தக் கேள்விகள் ஒன்றில், அரச...
யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். யாழ்.குடாநாட்டுக்கான பிரதி...
வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் அவரது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கரலிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், இதில் வடக்கின் தேவைகள் சம்பந்தமாக...
யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...
கிளி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த கோவில் கட்டுமானப்பணி உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பது உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் தீவிரமாகியுள்ள பௌத்த சிங்கள மயமாக்கல் நோக்கில் ஸ்ரீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (22-8-2016) நடைபெறும் நடைபயணத்திற்கு தமிழ்த்...
Loading posts...
All posts loaded
No more posts
