Ad Widget

கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் 500 கடற்படையினர்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர்.

காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர்.

குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதற்காகவும் கோத்தாபாய கடற்படைமுகாமுக்குச் சென்றுள்ளதாகக் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts