அடுத்த வருடம் முதல் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த...

போராதனை பல்கலை மோதல் குறித்து விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீட மாணவக் குழுக்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்...
Ad Widget

விவசாயிகளுக்காக அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். சஞ்சீபன் சாதனை

விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும்...

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பமாகியது

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும்...

செருப்புடன் சென்றவர்களுக்கு பிணை!

நல்லூர் வீதியில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன், இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுமதித்துள்ளார். நல்லூர் ஆலய சூழலில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார், திங்கட்கிழமை (22) இரவு...

வித்தியா கொலை வழக்கு : இன்றும் தீர்வில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை...

உறவுகளை பறிகொடுத்த பெண்ணின் காணியை பறித்து அரச வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...

எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது...

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடியவர்கள் கைது

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்துத் தெரியவருவதாவது, நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தபட்ட இலங்கையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளித்த அறுவர், ஆஸி அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த மாதம் 21ம் திகதி இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர்...

வலி.வடக்கில் 460 ஏக்கர் காணி ஒரு வாரத்திற்குள் விடுவிப்பு

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...

மட்டக்களப்பு, காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார்...

கீரிமலை வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகளில் இராணுவத்துடன் முன்னாள் போராளிகள் இணைவு

இடம்பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள 971 குடும்பங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் போராளிகள், ஈடுபட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவத் தளபதி லெப்டினன்...

காக்கைதீவில் கழிவுநீர் பரிகரிப்பு நிலையம்:அமைச்சர் ஐங்கரநேசன் அடிக்கல் நாட்டி வைத்தார்

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார். யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில்...

யாழில் காவல்துறை பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு!

யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது...

மயிலிட்டியில் சில பகுதிகளை விடுவிக்க இணக்கம்!

மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...

நல்லூரில் விமானத்தில் ஐஸ்கிறீம்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக விமானம் வடிவிலான விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. நல்லூருக்கு வருகை தரும் மக்கள் குறித்த...

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம்...

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்பணம்

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்;பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22) காலை 9.30 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் முன்னெடுப்பில், இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த தகவல் பிரிவு ஒன்றும், யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்தல், தொழிற்பயிற்சிகளை...

புற்றுநோயாளர்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

புற்றுநோயாளர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குவதற்காக வைத்தியசாலைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும்...
Loading posts...

All posts loaded

No more posts