- Thursday
- May 7th, 2026
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விஷேட பாண்ட வரி இன்று முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 35 ரூபாவாகவுள்ள இந்த ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர விலையைப் பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும்...
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...
வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இணைந்து சங்கம் ஒன்றையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து காணாமல் போனோர் சம்மேளனம் ஒன்றையும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வட...
பேராதனை பல்கலைகழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர். பிரதேச செயலரின்...
இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...
ஆயுதம் ஏந்தினோம் அது மௌனிக்கப்பட்டு விட்டது. ஆனால், எமது போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நல்லைக்குமரனின் 24வது மலர் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...
பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மாவனெல்லை பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாவனெல்லை பகுதியில் இருந்து நேற்று இரவு குறிப்பிட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர்...
கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (24.08.2016) யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்துள்ளார். வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு தொழிலின்போது பனையில் இருந்து தவறி...
இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள பொறியியல் படையின் கண்ணிவெடி அகற்றும் மோப்பநாயான “அல்வின்” மற்றும் அதனை கையாளும் லான்ஸ் கோப்ரல் ஜீ. என்.டபிள்யூ.எம். நவரத்ன ஆகியோரின் பெயர்களே இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும்...
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம்...
தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer...
வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார். வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், யாழ் குடாநாட்டிலும் இதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று பிரதான கட்சியாக எழுச்சியடைந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு...
வட மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் தன்னிச்சையாக செயற்படாமல், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை செயற்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து தெற்கின் எடுபிடிகளாக தம்மை மாற்ற நினைப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...
தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம்...
இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில்...
சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய நாளாகப் போற்றுகின்றனர். இந்தப் புனித நாளில் ஏனைய மக்கள் அணிதிரள்வதோடு, யாழ்ப்பாண மக்களும் முழுமையாக அணிதிரண்டு முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நாளில் அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை மூடி விடுமுறை நாளாக...
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன். புதிய கட்சியை ஆரம்பித்தே தீருவேன்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கப் போகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமரர் ரணிசிங்க பிரேமதாஸ கட்சிக்குள் இருந்த முக்கிய...
Loading posts...
All posts loaded
No more posts
