Ad Widget

சிறுமி கொலை தொடர்பில் 16 வயது சிறுவன் கைது

சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சந்தேகநபர் சம்பூர் – நீலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த 4 வளது சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்திருந்தனர்.

Related Posts