தெல்லிப்பளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவரொருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் , அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை , கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.