Ad Widget

4 வயது சிறுமி சடலமாக மீட்பு

திருகோணமலை – சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருடையது என, அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதோடு, சந்தேகநபரான இளைஞரும் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts