Ad Widget

கோட்டாபயக்கு எதிராக வழக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழ்வருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நிஸங்க யாப்பா சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயனாத் கொழம்பகே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜெயரத்ன, மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பிரணாந்து, மேஜர் ஜெனரல் கருணாரத்ன ஏகொடவெல மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரே இணைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்தமை மற்றும் அதன் மூலம் எவன்காட் நிறுவனத்திற்கு 11.4 பில்லியன் ரூபா வறுமானம் ஈட்ட வாய்ப்பை வழங்கியமை தொடர்பிலயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts