- Sunday
- May 10th, 2026
இளவாலை மாதகல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து, உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம், திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை, 636,106ஆல் குறைவடைந்துள்ளதாக, போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்தது. போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையிலேயே, அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 668,907 மோட்டார் வாகனங்கள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட போதும் 2016ஆம் ஆண்டில், 32,801 மோட்டார் வாகனங்கள் மாத்திரமே புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையே...
திருகோணமலை பாசிக்குடா கடற்பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில், மர்மப்பொருளொன்று மூழ்கிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மூழ்கிக்கொண்டிருக்கும் மர்மப்பொருள், கப்பலாக இருக்கலாம் அல்லது விமானத்திலிருந்து கடலில் விழுந்த ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ அரிசியை 78 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சதோச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பண்டிகைக் காலப்பகுதியில் சந்தையில் அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெல் களஞ்சியப்படுத்தும் சபையினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகை நெல்லைக் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அத்தோடு பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சர் றிஷாட்...
மார்ச், மற்றும் ஏப்பிரல் மாதம் வரையில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. எதிர்வரும் மார்ச், மற்றும் ஏப்பிரல் மாதம் வரையில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டு மக்கள் நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இத தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்...
நீதித் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் நியாயமான சம்பள முறையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். நீதித் துறையில் பணியாற்றுவோருக்கு நியாயமான சம்பள முறையொன்று இல்லாத குறைபாட்டை அரசாங்கம் அடையாளம் கண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். அதன்படி திறந்த மனதுடன் பக்கச்சார்பற்ற, சுயாதீன சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக அந்தத் துறையின் அனைத்து...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவா்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள் உயிர்களை விட்ட ஆயிரக்கணக்காக இளைஞா் யுவதிகள்...
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்போது 09 தலைப்புக்களின் கீழ் பேசப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகள்...
தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி! பேரவைக்கூட்டத்தில் இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் ஆற்றிய உரை
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் (19-12-2016) , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக...
மூன்று தசாப்த காலப்போர் மண்ணுக்காகவே நடைபெற்றது. 'இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்' என்று மண் மீட்புக்காகவே நாம் போராடினோம். ஆனால், மண்ணுக்காகப் போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான விவசாய இரசாயனங்களால் கொலை செய்து வருகிறோம் என்று வடக்கு விவசாய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய...
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்பதற்கு உதவிய யாழ்ப்பாண மக்களுக்கு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
சிங்கள மக்கள் மீது தமிழர்கள் வெறுப்பாக உள்ளார்கள் என நினைத்துகொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு எண்ணப்பாடே தென்பகுதியில் காணப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதற்கு தமிழ்...
யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்றும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் என்றும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இன்றைய தினம் காலை ஈ.பி.டீ.பி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம்...
வருடாந்தம் இடம்பெறும் சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றமானது வடக்கு மாகாணத்தில் உரிய முறையில் பின்பற்றப்படவில்லையென யாழ். மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்துள்ளார். தமது இடமாற்றம் குறித்து இதுவரை பலருடன் கலந்துரையாடியபோதும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், வட மாகாணத்தின் சகல பொது சுகாதார பரிசோதகர்களும் இன்றுமுதல் காலவரையறையற்ற வெளிக்கள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்...
மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 8.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பமாகியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65...
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (17.12.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்....
வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இணங்க மாட்டாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். இரண்டு மாகாண முதலமைச்சர்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுப்பது புத்திசாலித்தனமல்ல எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்...
கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, குறித்த சனசமூக நிலையத்தின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்களும்...
வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை உட்பட பல்வேறு சமூக அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், வடக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தைப் புறக்கணித்து பொருத்து...
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, தமிழ் நாடு காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவையை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிணங்க, காங்கேசன்துறையிலிருந்து, காரைக்காலுக்கு கப்பல்சேவை நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை திருவெம்பாவைத் திருவிழா சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. திருவெம்பாவின் இறுதி நாளான, திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தில் உள்ள...
வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 நாட்களாக தனிமையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வயோதிப தாய் ஒருவர் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு வதாவது, வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்று கடந்த எட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
