Ad Widget

மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 5.6 கிலோக்கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாங்குளம் பொலிஸ்நிலைய சிறுகுற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்துபுரம் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மற்றும் அளவிடுவதற்காக வைத்திருந்த தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரை இன்று வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts