கடலுக்குச் செல்பவர்களே அவதானம்!

திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...
Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு பல்கலை மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நியாயம் வேண்டி கிளிநொச்சியில் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நல்லாட்சியா நாடக ஆட்சியா?, எமது உறவுகள் எங்கே, என்ற பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கிளிநொச்சி திரேசா ஆலய...

இலங்கையை காப்பாற்றும் நாடுகளின் தூதுவராலயங்களை முற்றுகையிடுவோம்: அனந்தி

ஈழத் தமிழர்கள் நிம்மதியற்று இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளனார். வடக்கு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவாக...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! கண்டனப் பேரணி!

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள்...

சாந்தன் உயிரிழந்தார்

ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரான சாந்தன் என அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் 2.10க்கு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் சுகவீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

நெல்லியடி - புலவரோடை பகுதியில், அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். புலவரோடை பகுதியில், சனிக்கிழமை (25) தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டுள்ளனர்....

யாழ் பல்கலையின் அடுத்த துணை வேந்தர் யார்?

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவிற்கான தேர்தலில் விஞ்ஞானபீட பீடாதிபதி சிறிசற்குணராஜா 18 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் தெரிவாகியுள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அப் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் மிகுந்தன், பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்...

கர்ப்பிணிகளே அவதானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார். வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும்,...

பட்டப்படிப்பை நிறைவு செய்ய 3 மாதங்களே உள்ள நிலையில் இலங்கை மாணவிக்கு சிக்கல்

பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும்...

வடமாகாண விவசாய அமைச்சு மீது விசாரணை

வடக்கு மாகாண விவசாய அமைச்சு மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாண பொது நூலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று விசாரணை செய்திருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால், விசாரணைக்குழு ஒன்று...

உறுதிமொழியின்றேல் போராட்டம் தொடரும்: வட. பட்டதாரிகள் சமூகம்

வட மகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் தொடர்பில் உறுதிமொழியான பதில் வழங்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமென, வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது. இச் சமூகத்தினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கோரி, மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும்...

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் புகையிரதநிலைய அதிபர் தெரிவித்துளள்ளார் இதுவரை காலமும் காங்கேசன்துறையிலிருந்து காலை புறப்படும் யாழ்.தேவி புகையிரதமும், காங்கேசன்துறையிலிருந்து மாலை வேளையில் புறப்படும் தபால் புகையிரதமும் யாழ்ப்பாணம் வரை இணைப்புச் சேவையாக நடைபெற்று வந்தது. இதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து பயணிக்கும் பயணிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும்...

சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர். எனினும் இதுவரை அந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை....

தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில்

தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார். கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி...

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை

கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

பளை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது

பளை பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்த போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் காரில் இருந்து 22 கிலோவும் 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி...

நாட்டின் மின் உற்பத்தியில் கட்டுப்பாடு

தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
Loading posts...

All posts loaded

No more posts