- Wednesday
- May 13th, 2026
மாலபே SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியாக காட்டுவதற்கே மேற்படி துப்பாக்கி சூட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெறுவதற்கு நாம் ஜாதி, மத, இன பேதங்களின்றி...
கழுத்துறைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் சிறைச்சாலை பேருந்து மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் பலியாகியுள்ளார். குறித்த தாக்குதலில் கழுத்துறைச் சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தரான தர்மரத்ன...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நாளை முதல் 04ஆம் திகதி வரை நாட்டில், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், பிற்பகல் 5.30 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி...
யாழ் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று ஒருமணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 வருடமாக உள்ள பதவி உயர்வை 6 வருடமாக மாற்றுதல், தாதி பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளை வழங்குதல், அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நண்பகல் 12 மணி தொடக்கம்...
கண்டி - குண்டசாலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் அதே பாடசாலையில் 11, 12 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி குறித்த மூன்று மாணவர்களும், குண்டசாலை பகுதியிலுள்ள பாடசாலையில் வைத்து கணிஷ்ட பிரிவு மாணவர்கள்...
யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாகவும் இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை எனவும் நோயாளிகள் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர் மேலும், நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதுமான அளவு காணப்படாமையினால் நோயாளிகள் நிலத்தில் தங்கி தங்களது சிகிச்சைகளை பெற...
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத்...
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டு, ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரையரையின்றி இவர்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில் பட்டதாரிகளின் அவலம், பட்டதாரிகளின்...
கிளிநொச்சி - புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை. எவ்வாறாயினும், கிளிநொச்சியில்...
களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
வவுனியாவில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் நேற்று மறைந்த தமிழீழ எழுச்சிப் பாடகர், எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் நாளை, கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் நாளை (28) முற்பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இறுதி வணக்க நிகழ்வில், கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள்,...
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சமிபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பௌத்த மத தலைவர்கள்...
விவசாயிகள் கூடுதலான வருமானத்தைக் கருத்திற்கொண்டு, கீரி சம்பா போன்ற நெல் வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்ததனால் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து விபரிக்கையிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார பிரதிப் பொது முகாமையாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
