நாளை கிளிநொச்சியில் எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் நேற்று மறைந்த தமிழீழ எழுச்சிப் பாடகர், எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் நாளை, கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் நாளை (28) முற்பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இறுதி வணக்க நிகழ்வில், கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts