Ad Widget

யாழில் வீதியில் மீண்டும் குழுக்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றவேளை அங்கு காவல் துறை வரவே குறித்த இளைஞர் குழுக்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதன் போது இரவிரவாக நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் யாழ். காவல் துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.

Related Posts