நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும்!

வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளால் வடமாகாண சபை அமர்வு 2.30 மணி நேர தாமதத்திற்கு பின்னரே ஆரம்பமாகின. வடமாகாண சபையின் 87 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அமர்வு ஆரம்பமாக முன்னதாக வடமாகாண பட்டதாரிகள் வேலை கோரி மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து...

யாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு

அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...
Ad Widget

குடாநாட்டில் குழாய்க் கிணறு அமைக்க அனுமதி பெறவேண்டும்!

நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் யாழ்ப்பாணம் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய்க் கிணறுகளைத் தடைசெய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்வள முகாமைத்துவக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய்க் கிணறுகளும் ஓர் காரணமாக அமைகின்றது. வீடுகள், பொதுக்கட்டிடங்கள், அமைக்கும் போது அதற்கான அனுமதியில் குழாய்க் கிணறுகள்...

வேலையற்ற பட்டதாரிகளால் வடக்கு மாகாணசபை முற்றுகை!

வடக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று வடக்கு மாகாணசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துகின்றனர். இன்று வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமது கோரிக்கையை குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு மாகாண வேலையற்ற...

வட மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த தகவல் கோரல்

வடமாகாண அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களின் முழு விபரத்தையும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாண சபையின் அவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சபையின் அவைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி முதல் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மீனவர்களை விடுவிக்க இலங்கை, இந்தியாவுக்கு இடையில் இணக்கம்

இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலை அடுத்து, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, இலங்கை சார்பில் 85 மீனவர்களும் இந்தியா சார்பில் 19 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர். தற்போதுள்ள பதற்றத்தை தணிக்கும்...

பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் இதோ!

இவ் வருடத்தில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இவ் வருடம் மார்ச் 28ம் திகதியும், இம்முறை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன. அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

ஜெனீவா விவகாரத்தில் கூட்டமைப்பு ஒரே கருத்து நிலைப்பாட்டிலேயே இருக்கிறது

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மான விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்து கூறப்பட்டிருந்தது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கால அவகாசம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களில்...

பல்கலையில் மோதல்! ; நால்வர் காயம்! மாணவர்களுக்கு தடை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள மாணவர்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனி அமெரிக்கா வசம்?

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தகவலை பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை...

காணாமல்போனோரில் பலர் வெளிநாடுகளில்: பிரதமர் மீண்டும் குற்றச்சாட்டு

காணாமால்போயுள்ளதாக கூறப்படும் பலர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணவத்திடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே பிரதமர் மீண்டும் இந்தக் கருத்தை...

வடக்கில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது: குருகுலராஜா

மாகாண சபை உருவாக்கத்தின்பின்னர் வட மாகாண கல்வி அமைச்சில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் அதிக பட்டதாரிகள் வேலையற்றுக் காணப்படுகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய...

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்!: வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்....

இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் நேற்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்க தெரிவித்து பூநகரி மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி...

மீனவர் சுட்டுக் கொலை: விசாரணை அறிக்கை இரு வாரங்களில்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினர் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார். அண்மையில், கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழக மீனவர்...

யாழில் கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மீட்பு

நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்று காலை நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர் கடலில் பொதியொன்று மிதந்து வருவதை அவதானித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நயீனாதீவில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு அவர்கள் தகவலளித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட...

ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதற்கு தடை?

எதிர்காலத்தில் ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெள்ளை நிறத்திலான சிகரெட் பொதி அட்டைகளை அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியை பெறுவதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புளத்சிங்கள, ரெட்டியல பாடசாலையில்...
Loading posts...

All posts loaded

No more posts