8,000 பேர் 9 ஏ சித்திகள்; கணிதப் பாடத்தில் சித்தியடைந்த வீதமும் அதிகரிப்பு

நேற்றைய தினம் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8,224 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 6,102 மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்ததாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63...

ரவிராஜ் கொலை வழக்கு; விடுலையான கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறந்து விட்ட நிலையிலும், இருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் வழக்கில் சமூகமளிக்காத...
Ad Widget

உயர்தரத்திற்கு தகுதி பெற்ற ஒன்றரை இலட்சம் மாணவர்களுக்கு “டெப்“

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள், 1,75,000 பேருக்கு டெப் கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு முதலாவதாக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும்...

இலங்கை பிரஜைகளுக்கான அடிப்படை சம்பள அறிவிப்பு விரைவில்!

ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் பற்றிய அறிவிப்பு முன்வைக்கப்படும் என்றும் அவர்...

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச்...

முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் இன்றும் (புதன்கிழமை) முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மக்களை நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, அவர்களது நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்....

வடக்கு மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்: மங்கள

யுத்தத்தினால் துன்பப்பட்ட வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவே இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘உண்மையில் சர்வதேச நீதிபதிகளை அழைக்க காரணம் என்ன? எமது...

ஒற்றுமையின் தேவைக்காக மௌனமாக இருக்கின்றோம்; உரிய நேரத்தில் பதிலளிப்போம்

சாவகச்சேரி சங்கத்தானையில் நடைபெற்ற மண்டப திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசுக் கட்சி வெளியேறவேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெரிவிப்பது கொப்பில் இருந்துகொண்டு அடிமரத்தை...

இராணுவம் ஒத்திகை : காங்கேசன்துறையில் மக்கள் பதட்டம்!

மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என...

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே! : வடக்கு முதல்வர்

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார். சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வரும் டொக்டர் சூரியா குணசேகரவினால் ஊடகம் ஒன்றின் ஊடாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்....

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சில மாணவர்களினால் பல்கலைக் கழக கட்டிடத்தின் கண்ணாடிகள்...

போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோத்தாபய

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால்...

காணாமல் போனோரின் உறவினர்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு

காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை அறிவதற்காய் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்...

” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண்டு வாளினால் வெட்டினார்

நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை...

போரின் போது குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும்: வடக்கு முதல்வர்

போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ .வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். அந்த...

பட்டதாரிகளின் பிரச்சனை : ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க விக்னேஸ்வரன் தீர்மானம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 30...

யாழிற்கு புதிய கட்டளை தளபதி நியமனம்

யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஸ்ரீலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு படைகளின் தலைமையக தளபதியாக கடந்த இரண்டு...

மீண்டும் வெள்ளை வான்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நேற்று மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா பணம் பறிபோயுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது...

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும். மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும். முதலாம் வருட மாணவர்களின் வரவேற்புபசார நிகழ்வில் (10.03.2017 மற்றும் 11.03.2017) ஏற்பட்ட அசாதாரண நிலமைகளின் காரணத்தினால் மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றற்செயற்பாடுகள் தற்காலிகமாக...

வட்டுவாகல் பிரதேசம் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது!

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும்...
Loading posts...

All posts loaded

No more posts