யாழில் புதிதாக தோற்றம் பெற்றுள்ள கப்பம் கோரும் கலாசாரம்!

புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...

முல்லைத்தீவில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த குழுவினர் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பார்வையிட்டனர். முல்லைத்தீவில் - கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று முப்பத்து ஆறாவது நாளாக...
Ad Widget

இலங்கைக்கு நேராக சூரியன்: இன்றுமுதல் வெப்பம் அதிகரிக்கும்!!

இலங்கைக்கு நேராக சூரியன் காணப்படுவதினால் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றுமுதல் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 12.13லிருந்து ஹம்பாந்தோட்டை , கட்டுதம்பே , நாகியாதெனிய மற்றும் மலிதுவ ஆகிய இடங்களில் நேராக சூரியன் காணப்படும். நாடெங்கிலும் 30 செல்சியசிற்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த...

யாழில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

"யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை...

சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம் : சம்பந்தன்

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே...

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு...

வழித்தட அனுமதிப்பத்திரமின்றிப் பயணித்தால் ரூ.2 இலட்சம் தண்டம்!

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று(04) செவ்வாய்க்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச்...

நுளம்புகள் அற்றகிராமம்: முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்

பளைப் பிரதேசசெயலக பிரிவிலுள்ள முல்லையடி கிராம மக்கள் தமது கிராமத்தில் ´நுளம்புகள் அற்ற கிராமம்´ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று முன்தினம் (03.04.2017) ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது வீடுகள் மற்றும் அயல்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தமது கிராமத்தினை நுளம்புகள் அற்ற கிராமமாக மாற்றவுள்ளனர். முல்லையடியில் தத்தமது வீட்டையும்...

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிருத்தி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி!!

கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை...

திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது!!

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத...

வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது. வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த அனைத்­துப் பட்­ட­தா­ரி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து இன்று முற்­ப­கல் 9.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கும் பேரணி, யாழ்.நகர் நோக்­கிச் சென்று அங்­கி­ருந்து கண்டி வீதி வழி­யாக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தை அடை­யும் என்றும், வடக்கு...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாள் வெட்டு: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே கருத்து முரண்பாடு...

ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள்...

மூல்லைத்தீவில் சோகம் : பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்....

நல்லூரில் மாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள்

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர் ஒருவர் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுடன் வந்த மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். இதேவேளை...

நெப்போலியனை நாடுகடுத்தும் ஏற்பாட்டுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கடந்த 2001ஆம் ஆண்டு யாழ்.ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் மற்றும் மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோரை இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்...

ஊர்காவற்துறை படுகொலை சந்தேக நபர்கள் 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின்...

7ஆம் திகதி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts