Ad Widget

வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி!!

கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக் காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள் அவரது உருவப்படத்தை வைத்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

அத்துடன் அவரது நினைவாக அஞ்சலிப் பதாதைகள் தொங்கவிட்டு 36ஆவது நாள் போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்தனர். இதன்போது கலந்து கொண்ட பட்டதாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் திருகோணமலையைச் சேர்ந்த எங்கள் சகோதரியொருவர் அகால மரணமடைந்ததையொட்டி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளோம். அவரது நினைவாக உணர்வு பூர்வ அஞ்சலி நிகழ்வை நடாத்தியுள்ளோம்.

Related Posts