- Friday
- December 19th, 2025
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா – மன்னார் 220 கிலோ...
சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத...
கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை , இராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் புதன்கிழமை (15) கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்று இருந்தனர். கடலில்...
சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 7 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டதாக...
கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் நேற்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேற்றப்பட்டு, தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம்...
2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் வெளியிட்டார். பொதுமக்களின் ஆலோசனைகள், மின்சாரக் கணக்கீட்டு...
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் திங்கட்கிழமை (13.10.2025) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. விசேட...
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே...
முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலொன்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (13) அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த கும்பல், வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளது. அதன் பின்னர், அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், இறப்புக்கான காரணத்தை தெரிவித்தாலே சடலத்தை பொறுப்பேற்போம் என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது....
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். நேற்று (09) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாகாண தேர்தல்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விஜித ஹேரத்...
பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...
அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (09) குப்பைகளை குறித்த...
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கூறிய திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்ப முறை முடக்கப்படும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த சூழ்நிலையிலும்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்ட பின்னர்...
செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான நேற்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற...
எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த...
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 335. 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. லங்கா ஆட்டோ டீசலின் விலையும் ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான...
கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
