தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 22 ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நகர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வுத் நிலையம் வெளியிட்டுள்ள எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் அவதானமாகக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனால், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும்.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தீவின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சபரகமுவ, மத்திய, ஊவா, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.