புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு போக்குவரத்து சபையில் முன்னுரிமை

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இவற்றுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் விண்ணப்பிக்கலாமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதம் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு...

சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடம், பேருந்து தரிப்பிடம் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!!

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடம் என்பன கடந்த புதன்கிழமை(04) இரவு விஷமிகளால் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கல்லூரி மாணவர்களின் சாதனைகளைப் பறைசாற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிப் பத்து இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட...
Ad Widget

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்திற்கு அண்மைய காணிகள், வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனை சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி...

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்களை அழைத்துச் சென்றதைக் கண்டேன்” கொலை வழக்கில் பெண் சாட்சியம்

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” இவ்வாறு சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்யப்பட்ட இராணுவத்துக்கு எதிரான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு...

பாடசாலைகளுக்கான விடுமுறை ​​அறிவிப்பு

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று (04) மாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்று (04) காலை 9 மணியளவில் மகள் வெளியில்...

‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வார்த்தையை...

ஐ.நா. நம்பாத இலங்கை அரசை நாமும் நம்ப தயாரில்லை: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 405ஆவது நாளாக நேற்று (புதன்கிழமை) தங்களது போராட்டத்தை தொடர்ந்த உறவுகள், கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்...

விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்!!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றிப்பெற்றும் எமது அரசியல் செயற்பாடுகளில் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் காணப்படுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “முன்னாள் போராளிகளாகிய நாம் கடந்த காலமாக எமது உரிமைகளுக்கான போராடி...

நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் ரணில் அமோக வெற்றி

மகிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்றம் பிரதமரது அதிகாரத்தை மீள ஸ்தாபித்துள்ளது. நேற்றையதினம் இந்த பிரேரணை மீதான விவாதம் 12 மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், 46 மேலதிக வாக்குகளை அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 உறுப்பினர்களும் வாக்குகளைப் பயன்படுத்தி...

ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு!! : நாடாளுமன்றில் சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் இதனை அறிவித்தார். “தேசிய அரசுக்கு தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கும்....

ரயிலுடன் மோதி 17 வயதுடைய மாணவன் பலி!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதி 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (04.04.2018) அதிகாலை 3.30 மணியளில் இடம்பெற்றுள்ளது. கற்குழியில் வசித்து வரும் 17 வயதுடைய சுபலோசன் என்ற பாடசாலை மாணவன் நேற்றையதினம் குடும்பத்தாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் வீட்டை வீட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இந்நிலையில், வவுனியா தேக்கவத்தை...

நுண்கடன் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டம் – ஆறு மாத்திற்கு கடனை செலுத்த வேணடாம்!!

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...

பொருட்களின் விலையேற்றம் நாளாந்த வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்: டக்ளஸ்

பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாட்டில் தற்போது...

சத்திரசிகிச்சை உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும்: யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்

தைரொட்சைட் (கண்டக்கழலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் து.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில்...

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கும்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இன்று காலை இடம்பெறவுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளனர். தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைவரத்தை ஆராய்ந்துபார்க்கையில் தமிழ்த்...

பொய்த்துப்போன அமைச்சரின் வாக்குறுதி!- மீண்டும் போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள்!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழு தீர்மானித்துள்ளனர். மேலதிக கொடுப்பனவிற்கான சுற்றுநிரூபம் வெளியிடுவது குறித்த உயர்க்கல்வி அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 35 வீத மாதாந்த மேலதிக கொடுப்பனவில் 10 வீதத்தை...

நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்திரி- சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், ”நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்றிரவு அல்லது...

முகத்தாடை சத்திரசிகிச்சை செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்!!

முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாட்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு!!

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ் கூட்டமைப்பு குறித்த விடயம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாகவெ செயற்பட்டு வருகின்றது...
Loading posts...

All posts loaded

No more posts