Ad Widget

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று (04) மாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்று (04) காலை 9 மணியளவில் மகள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது, தாயாரைக் காணவில்லை என தேடிவந்தனர்.

இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts