வைத்தியசாலையில் தங்கியிருந்தபடி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு...

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- கைதடி பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Ad Widget

இரணைமடுவை மகாவலியுடன் இணைக்க அரசியல் சூழ்ச்சி: ஐங்கரநேசன்

மாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கின்றோம் என்ற பெயரில் இரணைமடுவை மகாவலியுடன் இணைத்து, மகாவலி அதிகார சபைக்கு சொந்தமாக்கி, ஏற்கனவே கொக்குளாய், நாயாறில் நடந்ததைப் போன்ற குடியேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்....

இரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப்...

வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் – பெண் காயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11...

முற்றவெளியில் வடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்துகின்றன. இந்தக்...

முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தமாட்டேன்: ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நான் தான் தீர்மானிக்க வேண்டும். அந்தவகையில்...

மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலகுவதே சிறந்தது – அமெரிக்கா

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். அத்தோடு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

நாடாளுமன்றம் கலைப்பு: தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகும் – சுமந்திரன்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று...

யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் அமர்வு வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான...

முப்படையினருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் வைத்து முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன் நிறைவில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் ஜனாதிபதி முப்படையினர்...

முல்லைத்தீவில் கிராம அலுவலகருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் முன்னாள் போராளி மற்றும் பொதுமகன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அசாதரண முறை குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பணியிலிருந்த கிராம அலுவலகர் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில்...

விஜயகலாவின் வழக்கு விசாரணை பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கை...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு!

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்...

இரும்புக்கம்பியால் கால்கள் கட்டப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட மனித எச்சம் மீட்பு

கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதுவரை வெளியிடப்பட்ட பல...

வறுமையை போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாண சபை தவறிவிட்டது – ஆர்னோல்ட்

யாழ். மாவட்ட மக்களின் வறுமையை போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாணசபை தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதாக கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை மாநகரசபையில் வைத்து நேற்றையதினம் (06) சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின்...

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப்பரீட்சையில் ஆள் மாறாட்டம்!!

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் ஆள் மாறாட்­டம் செய்து பரீட்சை எழு­திய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாலி நகர் மகா வித்­தி­யா­ல­யத்­தில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கல்­வித் திணைக்­கள வட்­டா­ரங்­கள்...

அரச வைபங்களை ஹோட்டல்களில் நடத்த முற்றாகத் தடை – ஜனாதிபதி உத்தரவு!

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (வியாழக்கிழமை) சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள்...

கூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லை: ஐக்கிய தேசிய கட்சி

ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றதே ஒழிய வேறு எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் அக்கட்சியுடன் மேற்கொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம்!

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கிளிநொச்சி இரணைமடு குளத்தினை விவசாயிகளிடம் கைளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி...
Loading posts...

All posts loaded

No more posts