Ad Widget

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப்பரீட்சையில் ஆள் மாறாட்டம்!!

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் ஆள் மாறாட்­டம் செய்து பரீட்சை எழு­திய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாலி நகர் மகா வித்­தி­யா­ல­யத்­தில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கல்­வித் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது,

தனி­யார் பரீட்­சார்த்தி ஒரு­வ­ருக்­குப் பதி­லாக யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த ஒரு­வர் பரீட்சை எழு­தி­யுள்­ளார்.

பரீட்சை எழு­து­ப­வ­ரில் சந்­தே­கம் கொண்ட அதி­கா­ரி­கள், உயர் அதி­கா­ரி­கள் துணை­யு­டன் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தி­யுள்­ள­னர்.

பரீட்சை எழு­த­வேண்­டி­ய­வ­ரின் வய­துக்­கும், பரீட்சை எழு­தி­ய­வ­ரின் வய­துக்­கும் இடை­யி­லான வித்­தி­யா­சத்தை வைத்தே அதி­கா­ரி­கள் குதி­ரை­யோ­டி­ய­வ­ரைக் கைது செய்­த­னர்.

அவர் நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டார், என்று குறிப்­பிட்­ட­னர். சந்­தேக நபர் நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இதே­வேளை, நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் சாதா­ரண தரப் பரீட்­சை­கள் தொடர்­பில் இது­வரை 10 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப் பெற்­றுள்­ள­தாக, பரீட்­சை­கள் ஆணை­யா­ளர் நாய­கம் தெரி­வித்­துள்­ளார்.

Related Posts