டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை...

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் இன்று முதல் புதிய நடைமுறை !

ந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. முதற்கட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்ற...
Ad Widget

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது!

யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிப் பேரணி அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக...

சக தமிழ் அரசியல் கட்சிகளிடம் டக்ளஸ் கோரிக்கை

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள அந்தச் செய்தியில் மேலும்...

எரிபொருள் நிலையங்களிலும் முகக்கவசம் அவசியம்

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது...

இன்று முதல் QR சிஸ்டம் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR முறைமையின் படி எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. QR முறைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்களுக்கு வருமான உரிமத்தைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்...

இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெற்றோலிய விநியோகத்தர் சங்கத்தின் இணைச் செயலாளர் நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையாற்றும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும்...

சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார், பொதுமகன் இடையில் தகராறு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று எரிபொருளை பெற்றபோது இடையில் சில இளைஞர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் நின்ற பொலிஸாரின் உதவியுடன்...

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை!

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இவ்வாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கைகளை தாமும் ஏற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் அரசமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

யாழ். பல்கலைகழக 2ம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர்...

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல்...

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள்

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம்...

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....

பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நயினாதீவு இறங்குதுறையில்...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண...

யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும்...
Loading posts...

All posts loaded

No more posts