Ad Widget

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இவ்வாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts