Ad Widget

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள்

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முதல், பொலிஸ்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts