Ad Widget

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, முதல் ஜெட் எரிபொருள் கப்பல் 12 மற்றும் 14 ஆம் திகதிக்கு இடையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts