Ad Widget

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கைகளை தாமும் ஏற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் அரசமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் ஆகியோர் கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை வரவேற்றனர்.

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மேலும், பல்வேறு திறமைகளைக் கொண்ட இளைஞர்களும் அதில் பங்கேற்றிருந்ததை தாம் கண்டதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த வேளையில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts