குற்றச் செயல் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது! யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அர்ப்பணித்த செயற்பாடுகள் காரணமாக ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக திகழ்வதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)

9 கிராம அலுவலர் பிரிவுகள் வலி.வடக்கில் பறிபோகும் ?

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது.இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக...
Ad Widget

கர்நாடக இசைக் கல்லூரியை யாழில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்: உன்னிகிருஷ்ணன்

யாழ்ப்பாணத்த்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்ப்பதற்கு பயிற்சி நிலையம் ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக கர்நாடக சங்கீத வித்துவானும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

யாழ் மட்டுவில் பகுதியில் வீதி விபத்து தலை நசுங்கி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையால் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர்  தலை நசுங்கி பலியாகியுள்ள   சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்பு?

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்புத்தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வருடாவருடம் நடைபெறும் பெருந்திருவிழாவில் வழமையாக வாசிக்கும் ஏகபோக உரிமையானது வித்துவான் பத்மநாதன் மறைவின்பின் பாலமுருகன் குழுவினருக்கு கிடைத்திருந்தது (more…)

புலிச்சின்னத்தை உடம்பில் பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் விடுதலை

பிரான்ஸிலிருந்து யாழ் வந்திருந்த புலம்பெயர் இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார். (more…)

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது. (more…)

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளன: அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாவதும் தொடர்பாக பத்திரிகையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. (more…)

தமிழ் அரசியல் கைதியின் கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.முன்னணி அழைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதியின் கொலைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை எதிர்வரும் 15ம் திகதி யாழில் நடத்தவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.15ம் திகதி காலை 11 மணி தொடக்கம், 12.30மணிவரையில் குறித்த போராட்டம் யாழ்.நகரிலுள்ள பேரூந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைப்பு

இலங்கையில் புதிய செய்தி இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அத்துடன் வருடாந்த புதுப்பித்தல் கட்டணம் 10,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளரான பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். (more…)

வடக்கில் தேர்தல் நடத்தி, வடக்கின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம்: கோத்தபாய

வடக்கில் தேர்தல் நடத்தி அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிழக்கில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் விரைவில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மற்றுமன்றி அவர்களின்...

ஆளுநர்களின் 15 ஆவது மகாநாடு முதன்முதலாக யாழ்ப்பாணத்தில்!

ஆளுநர்களின் 15 ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடைபெறும் ஆளுநர்களின் மகாநாடு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில்...

த.தே.ம.மு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ். நீதிவான் விதித்த தடையுத்தரவு யாழ்.மேல்நீதிமன்றினால் ரத்து

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ்.நீதிமன்ற நீதிபதி விதித்த தடையுத்தரவை ரத்து செய்து தடலாடியுத்தரவொன்றை யாழ்.மேல்நீதிமன்று  பிறப்பித்துள்ளது.இலங்கை அரசினது நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை காவற்துறையினர்; முன்வைக்கப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி யாழ்.நீதிபதி மா.கணேசராஜா அப்போது தடை விதித்திருந்தார். (more…)

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில்  உபகுழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது (more…)

இடர் முகாமைத்துவ அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரவீர மீளக்குடியமர்ந்த மக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கினர்  (more…)

யாழ் மாவட்ட வாக்காளர் பதிவு நடவடிக்கை ஒகஸ்ட்15ம் திகதி வரை நீடிப்பு

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கை எதிர் வரும் ஒகஸ்ட் 15 ம்திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. என உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.இந்த வாக்காளர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புகாரணத்திலேயே  கால நீடிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டார். (more…)

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் மது போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைகளுக்கு அருகில் மதுபானமும் போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இப்பரீட்சைக்காக  2 இலட்சத்து 70 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றவுள்ளதுடன் 12 ஆயிரம் பரீட்சை  உத்தியோகத்தர்கள்  கடமைகளில் ஈடுபடவுள்ளனர். (more…)

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி மரணம் மாங்குளத்தில் சம்பவம்

மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவனை மோதி தள்ளிவிட்டுத் தலைமறைவாகியது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான். இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம்பெற்றது. (more…)

ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது .கணிதம்,ஆங்கிலம் போன்ற பாடங்களில் அதிகமாக வெற்றிடங்கள் காணப்படும்  கல்வி  வலயங்களுக்கு குறித்த 44ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளர்கள்  இந்நிகழ்வில்  யாழ் .வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட வடமாகாண ஆசிரியர்கள்  பலர் கலந்து கொண்டனர் .
Loading posts...

All posts loaded

No more posts