- Friday
- November 21st, 2025
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். (more…)
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு கண்டனம் தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பினால் வட பகுதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. (more…)
இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. (more…)
யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)
வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை (more…)
இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றுக்கு தற்கால வாழ்க்கை முறை, சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகள் இல்லாமை என்பன சாதகமாக அமைந்துவிடுகின்றன. (more…)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கள் வரை 20 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். (more…)
யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. (more…)
யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர். (more…)
வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றி இளைப்பாறிய பலருக்கு இன்னமும் விதவை, அநாதைகள் ஓய்வூதிய நிதி இலக்கம் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தமது எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் வட பகுதி சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)
மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்தில்கொண்டு 'போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு' இன் தலைவர் வி.சகாதேவன் 'எமது மீனவர்களின் வாழ்வுரிமைக்காக' என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. (more…)
பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்தார். (more…)
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டி யெழுப்புவதற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
