Ad Widget

கிராம அலுவலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியாலை கிழக்கு கிராம அலுவலர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

J/90 கிராமசேவகர் கிராம அலுவலரே இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சூத்திரதாரிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும், பொது அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டன.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

ariyalai

Related Posts