Ad Widget

வாகன விபத்தில் இளைஞர் பலி

accidentயாழ். மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் அன்ரனிராஜா (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடற்படையினரின் ஜீப் ரக வாகனமும் சைக்கிளும் மோதியே விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவரும் காயமடைந்தவரும் சகோதரர்கள் என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts