Ad Widget

காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த பசுபதி சோமசுந்தரம் (வயது 74) என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார்.

இவரின் சடலம் இன்று குறித்த பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் கூறினர்.

Related Posts