- Tuesday
- July 29th, 2025

யாழ். மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணபட்டிருந்த சிலர் கடந்த ஒரு சில தினங்களில் கடத்தப்பட்டும், காணாமல்போயுமிருப்பதாக தெரியவருகின்றது.கடந்த சில வருடங்களாக மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குழுக்கள் பொலிஸாரினதும், (more…)

பாடசாலை மாணவர்களுக்கு தினமும் இடம்பெறும் காலைப் பிரார்த்தனையின்போது போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பில் எடுத்துக் கூறவேண்டும். வீதி விழிப்புணர்வு பற்றிய எதிர்கால நலன்கருதி பாடசாலை அதிபர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி தெரிவித்தார். (more…)

புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை உரிமை மீறல் (more…)

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றுவதற்கும் வணக்கம் செலுத்துவதையும் யாரும் தடைபோடமுடியாது..யாழ். மாநகர சபையின் 'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் குறிப்பிட்டார். (more…)

பதிவு செய்யப்பட்ட 618 முச்சக்கரவண்டிகளிற்கும் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் 2013 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முச்சக்கரவண்டி சங்க தலைவர் எட்வேட் போல் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ். தம்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சியளிக்கின்றன.குறிப்பாக பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாதைகளே இவ்வாறு கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காணப்படுகின்றன. (more…)

வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், (more…)

பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.மிக வேகமாகச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் வீதிப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளன. (more…)

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், (more…)

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுகளின் ஒரு பாகமாக (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் என்பவரின் நல்லூரடியிலுள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. (more…)

வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் (more…)

சுன்னாகம் பகுதி வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதனால் வயிற்றின் சிறுபகுதி கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி இன்று தெரிவித்தார். (more…)

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் 149 ரூபாவாக இருந்த பெற்றொல் புதிய விலையின் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் (ஒக்டெயின் 90) விலை 159 ரூபா ஆகும் (more…)

2013 ஆம் ஆண்டு 25 பட்டதாரிகளுக்கு மீன்பிடி பரிசோதகர்களுக்கான நியமனத்தினை கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஐஸ்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்டு (more…)

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் வடமாகாண ஆளுநரினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாகாண கல்வி அமைச்சினால் யாழ். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பெயர் பட்டியலில் (more…)

All posts loaded
No more posts