சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தை தடைசெய்யவும்: டக்ளஸ் தேவானந்தா

நிரந்தர வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தினை தடைசெய்யுமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் தமிழ்,பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி கையளிப்பு

யாழ்.உடுவில் நந்தாறாம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி மற்றும் பிரின்டர் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. (more…)
Ad Widget

எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும்;சிவாஜிலிங்கம்

தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம்பெற்று வருகின்றதாக கூறி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பும் நோக்கத்தில் (more…)

சலசலப்பை ஏற்படுத்திய சம்பந்தன் உரையின் முழுவடிவம்!

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு - செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த உரையில் சம்பந்தன் எம்.பி. உண்மையில் என்ன கூறியிருந்தார்..? அவரது முழு உரையின், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு வருமாறு... (more…)

தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் இலங்கை தமிழரசு கட்சியினர் வேண்டுகோள்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக நடாத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வகையில் இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ். நகரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை, (more…)

தமிழ்க் கல்விச் செயற்பாடுகளை குழப்பும் நாசகார செயல்களுக்கு இடமளியோம்: தமிழர் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் செய்வது ஆசிரிய சங்கத்தின் வேலையல்ல என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (more…)

மூன்று வாரங்களில் 39 தமிழர்கள் கைது; சுன்னாகத்தில் நேற்று ஒரு பெண் தடுப்புக்கு

பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் நேற்றுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.அவர் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்பது பொலிஸாரால் தெரிவிக்கப்படவில்லை. இவருடன் சேர்ந்து கடந்த மூன்று வாரங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 39 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். (more…)

கசூரினா கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடற்கரையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் நிதர்சன் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (more…)

பருத்தித்துறை பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் இல்லையேன குற்றச்சாட்டு

பருத்தித்துறை பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் தலைமையில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. (more…)

திணைக்களங்களில் போதியளவு புள்ளி விபரங்கள் இல்லை!! ,வன்முறைகளை வெளிக்கொணர அனைவரும் முன்வாருங்கள்;; தேவை நாடும் மகளீர் அமைப்பு

யாழ் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் சரியான புள்ளி விபரங்களைப் பெறுவதற்கு முடியாது உள்ளதாக தேவை நாடும் மகளீர் அமைப்பின் கொழும்பு அலுவலக செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.தேவை நாடும் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைகள் தொடர்பிலான ஊடகவியலாளர் கலந்துரையாடல் (more…)

இணுவிலில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞன் சி.ஐ.டி.யினரால் கைது

இணுவில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டத்தாக கூறப்படும் இளைஞன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். (more…)

வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு

யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பால்நிலை வன்முறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் (more…)

மேலும் மூன்று பேர் கைது என முறைப்பாடு

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 14 ஆம், 15 ஆம் திகதிகளிலும் யாழ். குடாநாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இவர்களின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (more…)

திருநெல்வேலிப் பகுதியில் இனந்தெரியாதவர்கள் வாள் வீச்சு இருவர் காயம்

யாழ். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்களின் வாள் வீச்சிற்கு உள்ளாகி இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியின் இராமசாமிப் பரியாரியார் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது. (more…)

பல்வேறு விபத்துக்களில் நேற்று இருவர் பலி!!

வாகன விபத்தில் இளைஞன் பலி யாழ்ப்பாணம், அரியாலை, தபால்பெட்டிச் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்க்த திவாகரன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (more…)

மர்மப்பொருள் வெடித்தலில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான், மயிலங்காடு பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த 48 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் மண்வெட்டியில் அடிபட்டே இந்த மர்மப் பொருள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பங்கேற்பு ரீதியான அபிவிருத்தி எதிர்காலத்தில் வெற்றியளிக்கும்; யாழ்.மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு

வடக்கு மாகாணம் 34 உள்ளூராட்சி சபைகளைக் கொண்ட பெரிய பிரதேசம். இந்த நிலையில் யாழ்.மாநகர சபை ஆசிய மன்றத்தின் அனுசரணை, ஆலோசனையுடன் முதன்முதலாக பங்கேற்பு ரீதியான அபிவிருத்தித் திட்டத்தை 47 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ளது. (more…)

யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஒருவருட பூர்த்தி

தற்போதைய யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா யாழ். மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று காலை 6.30 மணியளவில் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன. (more…)

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணிகள் மீண்டும் எப்போது?

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக, பல்கலைகக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் (more…)

வெற்றுக்கண்ணால் சூரியனைப் பார்க்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வானில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாட்களில், வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம் என ஆதர் சீ கிளாக் மத்திய நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.வானில் ஏற்படும் மாற்றத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும் இதன் காரணமாக பார்வை கோளாறு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது (more…)
Loading posts...

All posts loaded

No more posts