Ad Widget

மொழிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம்

Call-telephoneமொழிப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் எந்தப் பாகத்திலும் மொழி தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் 1956 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டினைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் கீழ் இயங்கும் மொழிச்சங்க உறுப்பினர்களுக்கான அனுபவப் பகிர்வு கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் கந்தளாய் இளைஞர் மன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதுதே மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே தெரிவித்துள்ளார்.

அதன் போதே அவசர தொடர்புகளுக்கு குறித்த தொலைபேசி இலக்கம் பயன்படுத்த முடியும் எனவும் இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மொழிச்சங்க உறுப்பினர்களின் அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை தவிசாளர், மற்றும் மாற்றுக்கொள்கைக்கான அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே, வடகிழக்கு மாகாண மொழிச்சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் மாவட்டங்களைப் பிரதிநிதித்தவப்படுத்தும் மொழிச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related Posts