- Wednesday
- July 30th, 2025

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (more…)

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் (more…)

முச்சக்கரவண்டியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (இன்று), இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் வியாழக்கிழமை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியே மர்மனான முறையில் மரணமடைந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்... (more…)

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் அனுஷ;டிக்கப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. (more…)

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்திற்கொண்டு 2 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனினால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. (more…)

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் வழக்கு விசாரணைகளை 2013 ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை (more…)

கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுதலைச்செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிப்பதற்காக தடுத்து வைக்கப்படவுள்ளதால், (more…)

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர். (more…)

லொறி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் ஏ9 வீதிக்கும் எழுதுமட்டு வாழ் சந்திக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுமட்டுவாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுத்துரை பாலசுப் பிரமணியம் (வயது 27) இந்த விபத்தில் (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதானதையடுத்து விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளுக்கு படைப் புலனாய்வுப்பிரிவினர் சென்று அவர்களை விசாரணை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் நேற்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட கிரிட் லேச்சேன், (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்துவதால் நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். (more…)

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமையால் அதற்கு அருகிலுள்ள கோயில் காணியில் புதிய மயானத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts