பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் யாழில் போராட்டம்

பழுதடைந்த நிலையில் சேவையாற்றும் தனியார் பஸ்களின் வழி அனுமதி ரத்து; ஜனவரி முதல் நடைமுறைக்கு

தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் வாகனங்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும்.பயணிகளின் பயணத்துக்கு தகுந்த முறையில் இல்லாது பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வாகன வழி அனுமதிப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது. (more…)
Ad Widget

பாதுகாப்பற்ற மரப்பாலம் அச்சத்துடன் செல்லும் மக்கள்

மரங்கள் மற்றும் தடிகள் அடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பாலத்தினூடாக நெடுங்கேணியிலிருந்து சேனைப்புலவு செல்லும் மக்கள் தினமும் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தால் பெருவீழ்ச்சி!; சட்டவிரோத மீன்பிடியே காரணமாம்

குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று யாழ்.மாவட்டக் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். (more…)

வடபகுதி இளைஞர்களை தூண்டும் அரசியல்வாதிகளை விசாரிக்க புலனாய்வு பிரிவினருக்கு கோத்தா பணிப்பு

தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். (more…)

இந்திய பிரதித் தூதுவர் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதித் தூதுவர் ஸ்ரீ.பி.குமரன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி செயலாளர் பி.எஸ்.ராகவன் உட்பட பலர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். (more…)

வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி உண்பது உடலுக்கு கேடு ; யாழ் மாவட்ட சுகாதார சேவைப் பிரிவினர்

மேற்குல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியமையை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளன.குறித்த பறவைகள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்துள்ளன. (more…)

21 ஆம் திகதி உண்ணாவிரதம்!! தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனைவருக்கும் அழைப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். (more…)

வடக்கில் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு கண்டனம் தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பினால் வட பகுதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. (more…)

வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை அடுத்த ஆண்டு முதல் அமுல்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

நெடுந்தீவில் கட்டுமானப் பணிகளுக்கு வெளியிடங்களில் இருந்து பொருள்கள்; துறைமுகத்தில் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி

நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. (more…)

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)

இராணுவத்தில் வடக்கு இளைஞர்களும் விரைவில் இணைக்கப்படுவர்; ருவான் வனிகசூரிய தெரிவிப்பு

வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை (more…)

இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன; யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றுக்கு தற்கால வாழ்க்கை முறை, சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகள் இல்லாமை என்பன சாதகமாக அமைந்துவிடுகின்றன. (more…)

சிவில், அரசியல் உரிமைகள் குறித்து வியாழனன்று கலந்துரையாடல்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (more…)

கைதானவர்கள் குறித்து இதுவரை 20 முறைப்பாடுகள்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கள் வரை 20 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

மாணவர் பிரதிநிதிகள் நால்வர் வெலிக்கந்தைக்கு திடீர் மாற்றம்

கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். (more…)

யாழ். குடாநாட்டில் கிராமசேவையாளர்கள் ஊடாக விசாரணைக்கென அழைப்பு விடுத்து தொடரும் கைதுகள்

யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. (more…)

யாழில் கைக்குண்டு வீச்சு

யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர். (more…)

உள்ளூராட்சி சபை ஊழியர் பலருக்கு இன்னும் இல்லை ஓய்வூதிய இலக்கம்; பல குடும்பங்கள் வருமானம் இன்றி அவதி

வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றி இளைப்பாறிய பலருக்கு இன்னமும் விதவை, அநாதைகள் ஓய்வூதிய நிதி இலக்கம் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts