- Saturday
- February 21st, 2026
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (more…)
ஒரு வழிப் பாதை விதிமுறைகளை பொதுமக்கள் தகுந்த முறையில் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக யாழ்ப்பாண போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
வடமாகாண மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். மக்கள் நலனுக்காக மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை ஆதரித்து சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளேன் (more…)
வட மாகாணசபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் கே.பி என்றழைக்கபடும் பத்மநாதன் அவர்கள். (more…)
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)
சுன்னாகத்தில் வீதி மதகு திருத்துவதினால் அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு இரண்டு நாட்களாக செயலிழந்துள்ளது. (more…)
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். (more…)
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)
வடக்கு மாகாண சபையின் அலுவலகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை முதலில் முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாணசபை முதலமைச்சராகக் கடமையேற்றுக் கொண்டுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)
தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலையும் ஆனைக்கோட்டையில் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீண்டும் துப்பாக்கிகளுடனும் தொலைத் தொடர்பு சாதனங்களுடனும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். (more…)
கிளிநொச்சி - கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கானஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்று திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். (more…)
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. (more…)
இலங்கை கடல் வலயத்துக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
