Ad Widget

ஒரு வழிப்பாதை விதி முறைகளை தகுந்த முறையில் கடைப்பிடிக்கவும்; போக்குவரத்துப் பொலிஸார்

one-way-no-entreஒரு வழிப் பாதை விதிமுறைகளை பொதுமக்கள் தகுந்த முறையில் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக யாழ்ப்பாண போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:

யாழ். நகரில் ஒரு வழிப் பாதைகளைப் பயன்படுத்தும் போது கன்னாதிட்டிச் சந்தியில் இருந்து சிவன் கோயிலுக்குச் செல்ல முடியும். ஆனால் சிவன் கோயிலில் இருந்து கன்னாதிட்டிச் சந்திக்கு வரமுடியாது, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை சந்தியில் இருந்து கண்டி வீதிக்கு செல்ல முடியும்.

கண்டி வீதியில் இருந்து ஆஸ்பத்திரி வீதிக்கு செல்ல முடியாது. காங்கேசன்துறை வீதியில் இருந்து மின்சார நிலைய வீதிக்கு வர முடியும். மின்சார நிலைய வீதியில் இருந்து காங்கேசன்துறை வீதிக்குப் பயணிக்க முடியாது.

பொது மக்கள் இந்த ஒரு வழிப் போக்கு வரத்தைப் பின்பற்றி பயணிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதுடன் விபத்துக்களையும் குறைக்க முடியும் – என்று போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts