Ad Widget

தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் சத்தியப்பிரமாணம் – சரவணபவன்

saravanabavan_CIதந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு இதுவரையில் வெளியிடப்படாதது தொடர்பாக கேட்டபோது, அமைச்சர்கள் தெரிவு நாளை வியாழக்கிழமை நிறைவு பெறாவிட்டால், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாண நிகழ்வின் போது அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts