Ad Widget

விக்னேஸ்வரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

vicki

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts