- Thursday
- July 24th, 2025

'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ.ம.சு.முன்னணி முதன்மை வேட்பாளர் சி.தவராசா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பட்சத்திலேயே தற்போதுள்ள சமாதான சூழலை நீடித்து நிலைபெறச் செய்ய முடியுமென யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். (more…)

யாழ். நகரில் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)

ஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர். (more…)

51 ஆவது பாதுகாப்பு படையணியின் 18 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு படையணியின் இரத்ததான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். (more…)

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். (more…)

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர். (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. (more…)

சிங்கள இனவாத கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் வட மாகாண சபை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று சுயேட்சைக்குழு வேட்பாளரான மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் தெரிவித்தார். (more…)

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினால் விடுவிக்கப்படாத ஏழு வகையான முழு ஆடை பால்மாக்களில் டிசிடி இரசாயனம் அடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு இராணுத்தினரே காரணமாக இருக்கிறார்கள் இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு வழிசமைக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கணவன், மனைவி இருவரில், கணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts