மக்களுக்காகவே அரசு, அரசுக்காக மக்கள் இல்லை – அங்கஜன்

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். (more…)

யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாருமே கண்டு பிடிக்க முடியாது; அரச ஊழியர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)
Ad Widget

தமிழரைப் பிரித்தாளும் தந்திரத்தில் மஹிந்த அரசு; யாழ்ப்பாணத்தில் ரில்வின் சில்வா

"தமிழ்த் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறது மஹிந்த ராஜபக்­ஷ தலைமையிலான அரசு. பிரித்தாளும் தந்திரத்தையும் தமிழர்கள் மத்தியில் அது கையாள்கிறது'' (more…)

பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார் – சரத்பொன்சேகா

இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

த.தே.கூ இன் தேர்தல் பிரசாரம் யாழ் நகரில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்து ஆரம்பமானது. (more…)

இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை: பசில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

நல்லூரில் பசில் …

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். (more…)

முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தவராசா பதில்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

23 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வழிபாடு

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

எனது அரசியல் பாதையில் இளைஞர்களும் இணைந்துள்ளனர்: அங்கஜன்

என்னுடைய அரசியல் பாதையானது தனியானது. மற்றவரின் பாதைகளை பின்பற்றி செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் செல்லும் பாதை தவறானது. (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

முழு இலங்கையும் தமிழர் தாயகமே – சந்திரசேகரன்

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)

ஐந்து மாகாணங்களுக்கு தொடந்தும் மழை

மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு தொடந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

இழப்புகளுக்கு காபட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது – என்.வீ.சுப்பிரமணியம்

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)

ஆனையிறவில் விபத்து; இராணுவ சிப்பாய் பலி; 7பேர் காயம்

ஆனையிறவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் பலியானதுடன் ஏழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

இராமநாதனின் பிணை மனு ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)

ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி செயற்திட்டம் : சுயேட்சை வேட்பாளர்

ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பூட்டு சின்ன சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலகிருஸ்ணன் இன்று தெரிவித்தார். (more…)

வடக்கு கிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்குகிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டுமாயின் வடமாகாண சபைத் தேர்தலை சரியான வழியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' (more…)

ஜனநாயக வழியில் போராடுவதற்காக தேர்தலை பயன்படுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

ஆயுத வழியில் போராடிய நாம் தற்போது ஜனநாயக வழியில் போராடுவதற்காக மாகாண சபைத் தேர்தலினைப் பயன்படுத்த வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு, ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts